நாளை தேர்தல்...மொத்த கிராமமே விடுத்த...அதிரடி எச்சரிக்கை

Update: 2024-04-18 08:31 GMT

#thanthitv #elections2024 #loksabhaelection2024 #kallakurichi

நாளை தேர்தல்...மொத்த கிராமமே விடுத்த...அதிரடி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூசப்பாடி கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்... பூசப்பாடி கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிப்பதுடன், பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டியும், அடிப்படை வசதி செய்து தரக் கோரியும் அப்பகுதி மக்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனி ஊராட்சியாக அறிவிக்கா விட்டால் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்... 

Tags:    

மேலும் செய்திகள்