"சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்" துரை வைகோவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வைத்த கோரிக்கை
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், மதிமுக வேட்பாளர் துரை வைகோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சியில் வழிநெடுகிலும் துரை வைகோவுக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு ஆகியோர், துரை வைகோவுக்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அனுசரணையான மத்திய அரசு அமைந்தால் மட்டுமே தேவையான நிதியை கேட்டுப் பெற முடியும் என்று தெரிவித்தார்...