"தண்டனை வழங்க முடிவு" - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

Update: 2024-04-16 08:30 GMT

#modi #bjp

நாட்டை கொள்ளை அடித்தவர்களையும் ஊழலில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களை வழங்க மக்கள் விரும்புகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

vovt

பிஹார் மாநிலம் கயாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி நாட்டின் நேரத்தை வீணடித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசியல் சாசனத்தை தகர்த்தவர்களை தண்டிக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பிரதமர் கூறினார். நாட்டை கொள்ளை அடித்தவர்களையும் ஊழலில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களை வழங்க மக்கள் விரும்புகின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்