தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குகள் - காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்

Update: 2024-04-18 02:32 GMT

தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குகள் - காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்

#madrashighcourt #madurai #election #thanthitv

உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஆயிரத்து 733 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல், 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது 8 ஆயிரத்து 655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில், ஆயிரத்து 414 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படுமெனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்