நார்வே நாட்டு பட்டத்து இளவரசி மெட் மாரிட்டினின்
(Mette-Marit) 28 வயதான மகன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 32 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெருவித்துள்ளார். ஆனால் தம்மீதான குற்றச்சாட்டை இளவரசி மெட் மாரிட்டினின் மகனான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Hoiby)
மறுத்துள்ள நிலையில், இந்த வழக்குகளில் முடிவுகளை எட்டுவது நீதிமன்றங்களின் பொறுப்பாகும் என அரச அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது