Thailand Flood | தாய்லாந்தை உருக்குலைத்த இயற்கை - கொத்து கொத்தாய் மடியும் மக்கள்

Update: 2025-11-28 03:19 GMT

கனமழை வெள்ளம் = கடும் சேதம் - 33 பேர் பலியான சோகம்

தாய்லாந்தில் கனமழை வெள்ளத்தால் 9 மாகாணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வர்த்தக நகரமான ஹட் யாய் (Hat Yai) நகரம், திரும்பும் திசையெங்கும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தெற்கு தாய்லாந்தில், பெருவெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்