"ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதி பேச்சு நடத்த தயார்" - போப் ஆண்டவர் அறிவிப்பு

Update: 2025-07-10 02:07 GMT

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருப்பதாக போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த போப் ஆண்டவர் லியோ, நீடித்த அமைதிக்கான அவசரத் தேவை குறித்து விவாதித்தார். தற்போது ரோம் அருகே Castel Gandolfo-வில் போப் ஆண்டவர் உள்ள நிலையில், இத்தாலி சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்