பிரேசில் சென்ற பிரதமர் மோடி.. உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

Update: 2025-07-09 02:38 GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'Grand Collar of the National Order of the Southern Cross' விருதை பிரேசில் அதிபர் லூலா, இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்த விருதுக்காக பிரதமர் மோடி, அந்நாட்டு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். விருதை இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், ஆழமாக வேரூன்றிய இந்தியா-பிரேசில் நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்