நான்கு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜனநாயக உலகில் பிரபலமாக திகழும் பிரதமர் மோடியின் பேரம் பேசும் திறன் பொறாமை பட வைப்பதாக கூறினார். மேலும், இந்தியா - அமெரிக்கா இணைந்து பணியாற்றினால் 21-ம் நூற்றாண்டு அமைதியானதாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.