மசூதிக்கு தீ வைத்து எரிப்பு - உச்சகட்ட பதற்றத்தில் ஈரான்
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறி, மசூதிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
ஈரானில் நிலவும் விலைவாசி உயர்வு, மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை போலீசார் கலைக்க முற்பட்டதால், மசூதிக்கு தீ வைத்து எரித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஈரான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.