அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் தென்கொரியா வரும் நிலையில், அண்டை நாடான வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது, இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், தரையிலிருந்து நீண்ட தூர இலக்கை தாக்கும் திறன்வாய்ந்த 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.