அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளதாக ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கு பிறகு முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரான் மீதான போரில் இஸ்ரேலுடன் இணைந்த போதும் அமெரிக்கா எதுவும் சாதிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.