இஸ்ரேல் போர் விமானங்கள் வெடிகுண்டு தாக்குதல் - ஈரான் சிறையில் சிதறிய 71 உயிர்கள்
இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த 23-ஆம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ஈரான் சிறையில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் சட்டத் துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலை மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் கடந்த 23-ஆம் தேதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், விசாரணைக் கைதிகள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் என 71 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்கள், வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர் என்று சட்டத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.