ஈரானில் மரண தண்டனைக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரானில் இந்த ஆண்டு இதுவரை 841 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஈரானில் 110 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு படியாக, மரண தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.