யுரேனியம் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவுடன் தொடர்ந்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். யுரேனியம் ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் இரு தரப்பு உறவில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அண்மையில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது கனடா பிரதமர் மற்றும் பிரதமர் மோடி இடையே இது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.