மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் - வெளியான அட்டவணை

Update: 2025-06-16 16:58 GMT

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டியில் செப்டம்பர் 30ம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் மோதவுள்ளன. அக்டோபர் 5ம் தேதி கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவிற்கு வர மறுப்பு தெரிவித்து இருப்பதால் அந்த அணியின் போட்டிகள் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்