காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.11.2025)

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இரண்டாவது லீக் போட்டியில், ஓமனை இந்திய அணி வீழ்த்தியது...

சென்னை நோக்கி வரும் 'டிட்வா புயல்' மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது...

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது....

சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது...

நாகை கீச்சான் குப்பம் கடற்கரை பகுதியில், பலத்த காற்றின் வேகத்தில் மின்கம்பம் சாய்ந்து, பைபர் படகு சேதமானது...

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், 3 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது...

டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்டுள்ள நிலையில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 153 பேர் உயிரிழந்துள்ளனர்...

துருக்கி அருகே கருங்கடலில் ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்த‌து...

2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தென்னாப்பிரிக்க வீரர் டுபிளசிஸ்...

X

Thanthi TV
www.thanthitv.com