திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், நகராட்சி ஆணையர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது நகராட்சி ஆணையரான புஷ்ரா, உடல் சோர்வடைந்த நிலையில், நகராட்சி அலுவலகத்திற்குள் மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.