இரு கல்லூரிகள் மாணவர்கள் மோதலை முன் கூட்டியே தடுத்த ரயில்வே போலீசார்
பொங்கல் கொண்டாட்டத்தில் இரு கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற இருந்த மோதலை முன்கூட்டியே ரயில்வே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அரக்கோணத்தில் கல்லூரி மாணவர்கள் 6 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கையில் மற்றொரு கல்லூரி மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேனர்கள் இருந்தன.
ஏற்கெனவே இரு கல்லூரிகளுக்கு இடையே மோதல் உள்ள நிலையில் பொங்கல் நாளில் ரயிலில் இந்த பேனரை கட்ட இருந்தனர்.
மாணவர்களை கைது செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த சென்ற போது பெற்றோர் கதறி அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது...