போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.. சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை அருகே கிராமத்திற்குள் புகுந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடி கிராமத்தில் வீடு வீடாக சென்ற மத பிரசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட இரண்டு பேரை பிடித்து இளைஞர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதுகாப்பாக அழைத்து சென்ற காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com