அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் இருந்து சென்ற ஒடிசா இளைஞர்
திருத்தணியில் இரு தினங்களுக்கு முன் நான்கு சிறுவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த சுராஜ், திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி அவர் அழுது கெஞ்சியதால், வழக்கின் பின்னணி அறியாத மருத்துவர்கள், அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணைக்காக மருத்துவமனை வந்தபோதுதான் அவர் வெளியேறியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
