மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் பள்ளி மாணவர்களை மது அருந்த வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்னியில் உள்ள கிர்ஹானி கிராம ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நவீன் பிரதாப் சிங்.
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த இவர் மாணவர்களுக்கு மதுபானங்களை வழங்கி குடிக்க வைத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் அந்த ஆசிரியரை மாவட்ட கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.