நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் துயரத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடனும் நேபாள அரசுடனும் தாங்கள் துணை நிற்பதாகவும், அண்டை நட்பு நாடாக நேபாளத்திற்கு தேவைப்படும் எந்தவொரு உதவியையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்