Ilayaraja | `அதிசய மனிதர்' இளையராஜா பாராட்டு விழாவில் மொத்த அரங்கமும் அதிர்ந்த முக்கிய மொமெண்ட்
திரையுலகில் 50 ஆண்டுகள் சிறப்பாக இசை அமைத்து சாதனை படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. சிம்பொனியில் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கி கவுரவித்தார்.