Erode | உடல் முழுவதும் எரிந்த நிலையில்.. தமிழக கர்நாடகா எல்லையில் பரபரப்பு
Erode | உடல் முழுவதும் எரிந்த நிலையில்.. தமிழக கர்நாடகா எல்லையில் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியின் தமிழக கர்நாடகா எல்லையில் மனித உடல் எரிக்கபட்டு எலும்புக் கூடு மட்டும் மீட்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் ரோந்து பணி சென்ற வனத்துறையினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் மண்டையோடு மற்றும் ஒரு சில எலும்புகளை மட்டும் மீட்டுள்ளனர். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்தபோது முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது உடலை உடன் வந்த நபர்கள் அடர்ந்த வன பகுதிக்கு மத்தியில் கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..