குப்பை கிடங்கில் குபுகுபுவென பற்றி எரிந்த தீ -ஏரியாவையே மூடிய கரும்புகை
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த ப.உ.ச.நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படும் நிலையில் குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
