Delhi Car Blast | Murasoli | டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் - கேள்விகளால் லாக் செய்த முரசொலி
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு,
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையில், இரட்டை இஞ்சின் ஆட்சி நடக்கும் டெல்லியில் குண்டு வெடித்து 13 பேர் இறந்துள்ளனர்...டெல்லி என்றால் ஏதோ மூலையில் அல்ல... செங்கோட்டைக்கு அருகில் குண்டு வெடித்துள்ளது.... ஆளும் தலை சரியாக இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துக்கு முன்னால் உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருந்தார்?... பாதுகாப்பில் கோட்டை விட்டது யார் என்பது அனைவர்க்கும் தெரியும்... பொறுப்பான அவர்கள் பொறுப்பேற்க வேண்டாமா? என்றும் முரசொலி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.