PM Modi | Amrit Bharat Express | PM மோடி கொடியசைத்ததும் பறந்த அம்ரித் பாரத் ரயில்கள்
3 அம்ரித் பாரத் ரயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருவனந்தபுரம் - தாம்பரம் உட்பட 3 அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி,
திருவனந்தபுரம் - தாம்பரம், திருவனந்தபுரம்- சரளப்பள்ளி, நாகர்கோவில் - மங்களூரு சந்திப்பு ஆகிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் திருச்சூர்- குருவாயூர் பயணிகள் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.