Karur Stampede Case | அஸ்ரா கார்க்குடன் கைகோர்க்கும் கருண் கரட் - பரபரக்கும் கரூர் வழக்கு
Karur Stampede Case | அஸ்ரா கார்க்குடன் கைகோர்க்கும் கருண் கரட் - பரபரக்கும் கரூர் வழக்கு
கரூர் சம்பவம்- எஸ்ஐடி குழுவில் திருவாரூர் எஸ்.பி. சேர்ப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவில், கூடுதலாக திருவாரூர் எஸ்.பி. கருண் கரட் சேர்க்கப்பட்டுள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கருண் கரட் சேர்க்கப்பட்டு விசாரணைக்காக கரூர் வந்துள்ளார்.