அருள் வந்து ஆடியவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்.. திருப்பதியில் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே அருள் வந்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெங்கடகிரி கிராமத்தில் காவம்மா அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வெண் பூசணியை கையில் பிடித்தப்படி அருள் வந்து ஆடிய நபர், திடீரென சரிந்து விழுந்தார்.அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினார்கள்..