கேரளா வந்த காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடல் அஞ்சலி செலுத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கேரள நபரின் உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக கேரள மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு, அமெரிக்காவில் உள்ள சகோதரர் வருகைக்கு பிறகு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.