Hariyana Viral Video | Police | ரோட்டில் சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களின் நிலைமையை பாருங்க?
ஹரியானாவில், சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 இளைஞர்களை போலீசார் பிடித்து நையப்புடைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்த பிரமோத் மற்றும் சஞ்சீவ் ஆகிய 2 இளைஞர்கள், ஹரியானா மாநிலம் பானிபட்டுக்கு, ஆடைக்கழிவுகளை வாங்க பைக்கில் சென்றனர்.
அப்போது, சாலையை கடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்து தங்கள் பாணியில் விசாரித்தனர். பின்னர் இருவரும் நடக்க முடியாமல் நடந்து சென்ற காட்சிகளையும் பகிர்ந்துள்ளனர்.