பயங்கரவாதிகள் உடன் துப்பாக்கி சண்டை - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
தெற்கு காஷ்மீரில் அகல் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அகல் வன பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 9 நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின. இரவு எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் உடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.