கிருஷ்ணரை சுமந்து வந்த தேரை தொட்டதும் துடிதுடித்து சுருண்டு பிரிந்த 5 உயிர்கள்

Update: 2025-08-18 05:31 GMT

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி - கிருஷ்ணஜெயந்தி விழாவில் சோகம்

ஹைதராபாத் அருகே கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின் போது தேரில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வீதியில் உள்ள மின் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரை இழுத்துச் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்