மருந்து பேக்டரியில் திடீர் தீ விபத்து - அதிர்ச்சி காட்சிகள் | andhra pradesh
மருந்து பேக்டரியில் திடீர் தீ விபத்து - அதிர்ச்சி காட்சிகள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பரவாடாவில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையில் இருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறி 100 அடி உயரத்திற்கு மேலெழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.