திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்து வெளியாகி உள்ள தண்டல் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தண்டல் படக்குழுவினர் இணைந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.