தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு
அனுமதியின்றி தனது பெயர் மற்றும் புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர், “உலகநாயகன்” என்ற பட்டம் மற்றும் பிரபல வசனங்களை அனுமதியின்றி பயன்படுத்தி டி-ஷர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, கமல்ஹாசன் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.
தனது தனி உரிமையை பாதுகாக்க, எந்த நிறுவனமும் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.