இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்“
இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்று கிடைக்காததால் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், திரைத்துறையினர் பலர் விஜய்க்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தி கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய வெங்கட் பிரபு “என்ன நடந்தாலும் சரி... இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்“ என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்...
Next Story
