மாரடைப்பால் உயிரிழந்த காவலர்... தவறான சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

Update: 2023-04-07 15:42 GMT

திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர், மதுரை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். ராஜபாண்டிக்கு முழங்காலில் வலி ஏற்பட்டதை அடுத்து, அதே பகுதியில் உள்ள சித்த மருத்துவர் சிவசுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, முழங்கால் வலிக்கு சிகிச்சை அளிக்கும்போது, ராஜபாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தனது கணவருக்கு சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியபோது, சிவசுப்பிரமணியம் முறையாக சித்த மருத்துவம் படிக்காமல் சிகிச்சை செய்து வந்ததும், வேறு ஒருவர் சித்தா சான்றிதழை வைத்து, மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரியவந்தது அதனைத் தொடர்ந்து, சிவசுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்