#JUSTIN | மலை ரயிலில் மக்களோடு பயணித்த ஆளுநர்!!

Update: 2023-06-07 07:58 GMT

5-நாள் பயணமாக கடந்த 3 ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உதகைக்கு வந்தார் 5-ம் தேதி ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்களுடனான மாநாட்டில் பங்கேற்றார். இந்நிலையில் இன்று புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணித்தார். உதகையிலிருந்து குன்னூருக்கு ஆளுநர் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் ரயிலில் பயணம் செய்தனர். ரயிலில் ஆளுநர் பயணிப்பதால் முழு பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டது ரயில் நிலையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ரயில் நிலையத்திற்குள் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மலைரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகளும் மலை ரயிலில் ஆளுநருடன் அனுமதிக்கப்பட்டு பயணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்