ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகம் போராட்டம்

Update: 2022-09-27 09:58 GMT

மனுதர்மம் குறித்தான திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மகளிர் அணி தலைவர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ள மனு சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்