எவரெஸ்ட் ஏறிய முதல் தமிழ்ப்பெண் - "முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நன்றி"

Update: 2023-05-30 14:43 GMT

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பயணத்தை தொடங்கிய அவர், கடந்த 23ஆம் தேதி எட்டாயிரத்து 848 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார். இதுகுறித்து பேசிய முத்தமிழ் செல்வி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறுவதையே லட்சியமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்