"அவதூறு பரப்புகிறார்.." பாஜக நிர்வாகி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு

Update: 2023-01-06 05:05 GMT

நீதிமன்றம் தடை விதித்தும், பா.ஜ.க நிர்வாகி நிர்மல்குமார், தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நிர்மல்குமாரின் கருத்துகள் நியாயமானதாகவோ, தரமானதாகவோ இல்லை எனவும் செந்தில் பாலாஜியை மக்களின் தலைவரா என கேள்வி எழுப்பும், நிர்மல் குமார், ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை எனவும், 5 முறை தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், அமைச்சரின் சகோதரர் கமிசன் வாங்கியதாக கூறிய நிர்மல்குமார், அதற்கான ஆதராங்களை வெளியிடவில்லை எனவும்,நிர்மல்குமார் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அவரது வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்