"ஐயப்பனை தரிசிக்க ரூ.1 லட்சம்" - சென்னை பக்தருக்கு ஷாக் கொடுத்த சபரிமலை

Update: 2023-04-03 05:33 GMT
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த வழங்கப்பட்ட கட்டண ரசீதில் மோசடி செய்த விவகாரத்தில் இருவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் காலங்களில் நடைபெறும் தங்க அங்கி சார்த்துதல், களபாபிஷேகம், நெய்யபிஷேகம் போன்ற பூஜைகளில் பக்தர்களுக்கு போலி ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
  • இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் வரையில் போலி ரசீது கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
  • இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பம்பை விருந்தினர் மாளிகையில் கடந்த சீசனில் தங்கியிருந்த இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்