3 இடங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி.. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

Update: 2022-11-07 03:13 GMT

தமிழகத்தில் 3 இடங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.

கடலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை ஒட்டி கடலூர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. பேரணிக்கு பின் சிறிய அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே, பேரணியின் வீடியோ மற்றும் போட்டோக்களை நீதிமன்றத்தில் கொடுத்து, மற்ற 47 இடங்களிலும் பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெறுவோம் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்