நகரசபை கூட்டத்திற்கு தயாராகும் கவுன்சிலர் - வெற்றிலை பாக்குடன் பத்திரிகை வைத்து அழைப்பு

Update: 2022-10-31 02:45 GMT

ராசிபுரத்தில் நகர சபை கூட்டத்தில் பங்கேற்க பத்திரிகையில் வெற்றிலை பாக்கு வைத்து கவுன்சிலர் அழைப்பு விடுத்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முதன்முறையாக நகர சபை கூட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்ட நிலையில், ராசிபுரத்தில் 12வது வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சசிரேகா தனது வார்டில் உள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். கையில் தாம்பூல தட்டுடன் வீடு வீடாக பத்திரிகை வைத்து சசிரேகா அழைப்பு விடுத்தார்.Rasipuram 

Tags:    

மேலும் செய்திகள்