சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Update: 2023-05-25 01:40 GMT

3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்றார். ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் பப்புவா நியூ கினியா நாட்டில் நடைபெற்ற இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோணி ஆல்பனீசை சந்தித்து பேசினார். பின்னர் சிட்னியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் கலாச்சார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 6 நாட்களில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை இந்தியா திரும்பினார். அவரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். தேசிய கொடியுடன் திரண்ட தொண்டர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்