மோசடி புகார்...தொடர் தலைமறைவு..மீரா மீதுன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-12-24 10:55 GMT

சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவதற்காக நிறுவனத்திடம் இருந்து நடிகை மீரா மிதுன் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகை மீரா மிதுன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை மீரா மிதுன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தற்போது தலைமறைவாக உள்ளதையும் குறிப்பிட்டு காவல்துறை ஆட்சேபனை தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் நடிகை மீரா மிதுனின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்