"இனி அப்படி செய்யவே மாட்டோம்"... போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் - நூதன தண்டனை கொடுத்த போலீசார்

Update: 2023-02-17 12:20 GMT
  • கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் கடிதம் எழுதி வாங்கி நூதன முறையில் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • கள்ளக்குறிச்சி நகர்ப்புற பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த இருசக்கர மற்றும் ஆட்டோ வாகன உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதுடன், "இனிமேல் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த மாட்டோம்" என்ற உறுதிமொழியை அவர்களின் கைப்படவே காவல்துறையினர் எழுதி வாங்கிய நிலையில், பொதுமக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்