புதுச்சேரியில் நள்ளிரவில் கைதான மின் ஊழியர்கள்

Update: 2022-10-03 02:54 GMT

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பகல் நேரங்களில் மட்டும் போராட்டம் நடத்திய ஊழியர்கள், தற்போது இரவிலும் மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே, ஊழியர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், 300க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், கோரிமோடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்